என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிவகங்கை கொள்ளை"
- வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர்.
- பீரோவில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர்.
தேவகோட்டை:
தேவகோட்டை ராம்நகர் 4 வீதியில் புதுக்கோட்டை மாவட்டம் கண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது70) என்பவரும், அவரது மனைவி குழந்தை திரோஸ் (65) ஆகியோர் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் குழந்தை திரோஸ் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு காணத்தங்காடு கிராமத்தில் உறவினர் திருமணத்திற்காக சென்று விட்டார்.
அப்போது அவரது வீட்டிலிருந்து தீப்பற்றி எரிந்தது. வீட்டில் இருந்து புகை வெளிவந்ததை கண்டு பொதுமக்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே இச்சம்பவம் குறித்து அறிந்த இன்ஸ்பெக்டர் சரவணன் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் அணைத்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் வீட்டில் திருட வந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து பார்த்துள்ளனர். அதில் நகை, பணம் இல்லாததால் வீட்டில் உள்ள பொருட்களுக்கு தீயை வைத்து விட்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்